Header Ads

சுங்கச்சாவடியில் வந்து குவியும் வாகனங்கள்.... திணறும் சுங்க சாவடி ஊழியர்கள்.....

 ✍️ | ராஜாமதிராஜ்.

ஈ- பாஸ் ரத்து செய்யப்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் வந்து குவியும் வாகனங்கள்.... திணறும் சுங்க சாவடி ஊழியர்கள்.....

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடி அமைந்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் இந்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்கள் வருவது வழக்கம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஐந்து மாதங் களாக நடைமுறையில் இருந்த இ பாஸ் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் சுங்க சாவடிகள் வாகனங்கள் இன்று அதிக அளவில் வருவதால் ஒவ்வொரு வாகனமும் இந்த சுங்க சாவடியை கடந்து செல்ல அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.

மேலும் வாகனங்கள் அதிக அளவில் சுங்கசாவடியில் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.