விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வீட்டிலேயே கொண்டாடவும். 🙏
விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22.08.2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா கிருமி பரவலை தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicVLsBrHxfaxrSFiD8gWJ-M8jmR1jFy_KzwvsASPvrkdld0VM0cDYIMbvpftU0kDvhWAwnltLWALQLh-5SQNDwPXqGSxSkqAogYLIC6LzUZfTsyU410lx3eHY6-RIZBxd2DaD-r5rRLu1S/w320-h179/vinayaga-chathurthi.jpg)
கொரோனா கிருமி பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுவதோ, சிலைகளை வைத்து கொண்டாடுவதோ, சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்வதோ, அல்லது சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலையே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும் மற்றும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவும்.
சிறிய திருக்கோவில்கள் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- வெளியில் செல்லும் பொது கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள்,
- சமூகத்தில் தூர இடைவெளியை கடைபிடிக்கவும்.
- பொது இடங்களின் எச்சில் துப்பாதீர்கள்.
- தும்மல் வந்தால் துணியினால் முகத்தை மூடிக்கொள்ளவும்.
- கூட்ட நெரிசலான இடம் மற்றும் தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும்.
- வீட்டில் குழந்தைகள், வயதான பெரியவர்கள் இருந்தால் அதிக கவனம் செலுத்துங்கள். அவர்களை வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள்.
- நேர்மறை சிந்தனையோடும் (Positive Thoughts), நம்பிக்கையுடன் இருங்கள்.
- போட்டி, பொறாமையை தவிர்த்து சமூக அக்கறையுடன் செல்படுங்கள்.
- நாம் மீண்டும் பழைய நிலைமைக்கு திருப்ப அனைவரும் பொறுப்புடன் செயல்படுங்கள்.
- ஜாதி, இனம், மதம் கடந்து ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்த கிருமி பரவலை முறியடிப்போம்.
No comments