Header Ads

சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி மறுக்கிறார்.

மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் குற்றம் சாட்டு.

ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

பாரத பிரதமர் மோடி நாடு நாடு போற்றும் நற்செயலை மேற்கொண்டுள்ளார். நாகூர் தர்கா, பனிமய மாதா விழாக்களுக்கு அனுமதி வழங்கும் தமிழக  அரசு , விநாயகர் சதுர்த்தி விழா நடத்தவும்  அனுமதி வழங்கி பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.


ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர்  பேஸ்புக், வலைதளங்களில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் குறித்தும் ஸ்தலத்தார்கள்,  நிர்வாககிகள் குறித்து   தவறான தகவல்களையும், அபாண்ட குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் இது கண்டிக்கத்தக்கது.

இவருக்குப் பின்னால் சில  இந்து விரோத சக்திகள் உள்ளது.

எனவே இதுபோன்ற நடவடிக்கையை இனியும் தொடராது நிறுத்தி   கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.

No comments

Powered by Blogger.