Header Ads

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

சென்னையில் நாளை முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகளையடுத்து, மத்திய அரசின் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கடந்த 7ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது.

சென்னையில் காலை 7 முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளின் கோரிக்கை ஏற்று கூடுதலாக ஒரு மணி நேரம் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படுவதாகவும், பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவும் மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.