கோபி பகுதியில் நடைபெற்றுவரும் தமிழக அரசின் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு.
✍️ | ராஜாமதிராஜ்.
கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்கள் வேலைக்கு வராமல் போனதால் திட்டப்பணிகள் முடிவடைவதில் கால தாமதம் ஏற்பட்ட்டது.
தற்போது ஊரடங்கு தளர்விற்கு பின் மீண்டும் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேரில் ஆய்வு செய்தார்.
கோபி வட்டாரத்தில் குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம், அயலூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுவரும் மேல்நிலை குடிநீர் தொட்டி,தடுப்பனை மற்றும் சமுதாயக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியருடன் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சிஅலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments