Header Ads

கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள் .


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, J-10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் (சட்டம் &ஒழுங்கு) அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் செம்மஞ்சேரி பகுதியில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 6 கிலோ எடை கொண்ட கஞ்சா கைப்பற்றுதல் செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

சிறப்பாக பணிபுரிந்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

No comments

Powered by Blogger.