Header Ads

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் நாக்கில் காயமடைந்த மக்னா யானை : உணவு உட்கொள்ள முடியாமல் வலியோடும் பசியோடும் தவிப்பு


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

கோவை அருகே கேரள எல்லைப்பகுதியில் நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில், உணவு உட்கொள்ள வழியின்றி மக்னா யானை ஒன்று வலியுடன் சுற்றி வருகிறது.

தந்தம் இல்லாத அந்த ஆண் யானை கடந்த மாதம் தமிழக வனப்பகுதியில் இருந்து கேரள வனப்பகுதிக்குள் நுழைந்தது. கேரள வனத்துறையினர் பரிசோதித்ததில் நாட்டு வெடிகுண்டு வெடித்து, அதன் நாக்கு முற்றிலும் சேதமடைந்தது தெரியவந்துள்ளது.

மீண்டும் கோவை மாங்கரை எஸ்.டி.எஃப் முகாமுக்கு வந்த யானை அங்குள்ள சமையல் கூடத்துக்குள் நுழைந்து உணவைத் தேடியுள்ளது. இதனையடுத்து சைரனை ஒலிக்கவிட்டு வனத்துறையினர் யானையை விரட்டினர்.

வாயில் காயம் ஏற்பட்டுள்ளதால் வலியோடும், பசியோடும் சுற்றி வரும் மக்னா யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க முயன்றால் அது இறக்க வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர். 

No comments

Powered by Blogger.