Header Ads

DACP ஊதியத்தை வழங்கிட தொடர்ந்து கோரிக்கை - அரசு மருத்துவர்கள்


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

அரசு மருத்துவர்கள் பத்தாண்டுகளாக நிலுவையில் உள்ள தகுதிக்கேற்ற DACP ஊதியத்தை வழங்கிட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். 

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே செப்டம்பர் மாதம் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்கள்  வரலாற்று சிறப்புமிக்க கோட்டை நோக்கி பேரணியில் எழுச்சியுடன் பங்கேற்றனர். 

அரசு செவி சாய்க்கவில்லை. தற்போது கொரொனா தொ‌ற்று நோய் அசாதாரண சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு தமிழகஅரசு நீண்ட நாள் கோரிக்கைகளான DACP ஊதியம் மற்றும் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இவற்றை நடந்து வரும் சட்ட மன்ற கூட்டத்தில் அறிவித்து மேலும் உற்சாகமாக பணி செய்ய ஊக்குவிக்க வேண்டும்

No comments

Powered by Blogger.