Header Ads

காணாமல்போன 9 மீனவர்கள் மியான்மர் நாட்டு கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு இன்று சென்னை வந்தடைந்தனர்...


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

சென்னை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 23-7-2020 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 9 மீனவர்கள் அரசின் பல்வேறு முயற்சிகளின் காரணமாக மியான்மர் நாட்டு கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, அந்நாட்டு கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 8 மீனவர்கள் புது தில்லி வழியாக இன்று (8-10-2020) சென்னை வந்தடைந்தனர். 

சென்னை வந்தடைந்த அவர்களை, விமான நிலையத்தில் அமைச்சர் திரு D.ஜெயக்குமார் அவர்கள் வரவேற்று, பொன்னாடை அணிவித்து, புதிய உடைகள் கொடுத்து, வழிச்செலவிற்கு என்று தன் சொந்த பணத்தை கொடுத்து, போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்து அவர்களை, அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இந்நிகழ்வின்போது மீன்வளத்துறை இயக்குநர் டாக்டர் G.S.சமீரன், IAS., மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

No comments

Powered by Blogger.