Header Ads

தீபாவளி பண்டிகைக்கு அரசு பேருந்து முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது!


✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான அரசு பேருந்து முன்பதிவு இன்று முதல் ஆன்லைனில் துவங்கியுள்ளது.

நவம்பர் மாதம் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், அரசு பேருந்து முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள், ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக, 700 சிறப்பு பேருந்துகள் இயக்க, போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.