Header Ads

சேலம் லீ பஜார் பகுதியில் இயங்கிவரும் பஞ்சு குடோனில் தீ விபத்து..

✍ | -ராஜாமதிராஜ். 

குடோனில் இருந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரம் மற்றும் துணிகள் அனைத்தும் எரிந்து நாசம்.

சேலம் லீ பஜார் பகுதியில் பிரபு ராகவன் என்பவருக்கு சொந்தமான பழைய  காட்டன் துணிகளை அரைத்து பஞ்சு தயாரிக்கும், ஆலை இயங்கி வருகிறது. இதில் 20க்கும் மேற்பட்ட  பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று வழக்கம்போல பணிகளை  மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென தீ பற்றியது.

பணியாளர்கள் தீயை அணைக்க முற்பட்ட போது மளமளவென பரவி குடோன் முழுவதும் பரவியதால். உடனே பணியாற்றி வந்த பணியாளர்கள் அனைவரும் குடோனை விட்டு வெளியேறினர். இதுதொடர்பாக பள்ளப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பல லட்சம் மதிப்பிலான பஞ்சு தயாரிக்கும் இயந்திரம், துணிகள் அனைத்தும் எரிந்து நாசமாகியது. இது தொடர்பாக பள்ளப்பட்டி காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.