Header Ads

கீரனூர் சிறப்பு ஆட்டுச் சந்தையில் 50 லட்ச ரூபாய்க்கு மேல் ஆடுகள் வியாபாரம் நடைபெற்றுள்ளது.

✍ | -ராஜாமதிராஜ். 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம் .இங்கு புதுக்கோட்டை திருச்சி தஞ்சாவூர் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் அதிகளவில் வருவது வழக்கம். அதேபோல் இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 50 லட்ச ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆடுகள் விற்பனை செய்யவும் ஆடுகளை வாங்கவும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் குவிந்ததால் அப்பகுதி மாநாடு போல் காட்சியளித்தது. அதேபோல் வியாபாரிகள் இல்லாமல் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள் விற்பனை செய்யவும் வாங்கிச் செல்லவும் விவசாயிகள் அதிகளவில் வந்தனர். இங்கு 4000 ரூபாய் முதல் 8000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.