Header Ads

சிங்கப்பூர் தனது 55வது தேசிய தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறது.

 


✍ | - முகன்.

இன்று சிங்கப்பூர் தனது 55வது தேசிய தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறது.

சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ சியன் லூங்க் அவர்கள் நாட்டு மக்களுக்கு சிறப்புரை ஆற்றினார். அதில், நாட்டு மக்களுக்கு தேசிய தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு இந்த கோவிட்-19 சூழ்நிலையில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு நோய்த்தோற்று கிருமி பரவலை முறியடிப்போம் என்று கேட்டுக்கொண்டார்.

இனி வரும் காலங்களில் நாம் பல்வேறு ஆகச்சிறந்த பணிகளை மேற்கொள்ளவிற்கிறோம். தற்போது நாம் கட்டம் கட்டமாக  நமது அன்றாட வேலைகளை தொடர அனுமதியளித்துள்ளோம்.

வெளிநாட்டு ஊழியர்கள் விரைவில் முற்றிலும் குணமடைந்து எல்லோரும் இந்த மாத இறுதிக்குள் வேலைக்கு திருபுவர்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய தினத்தன்று நமது கடந்தகால சவால்மிக்க தருணங்களை நினைவு கூர்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டையும் நாம் ஒற்றுமையோடு செயல் பட்டு கிருமி பரவலை முற்றிலும் முறியடிப்போம். இதனால் இனி வரும் காலங்களில் இளம் தலைமுறையினருக்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும்.

Powered by Blogger.