வரதட்சணை கொடுமையால் காவலரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை.......
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWlZfifJWJr1S6mOoYQ4DT5awhV6aSslMDYYIBAVVYp0FbWGIJXWYIwsq0Pozg9TlPS_3LhLsbwIzKOB0603zQ3eGwVtLuI-BHinHYzmPoZOOVihKNTdnD_q6igThNZf6hSgyankLhFAHy/s0/Police+wife.jpeg)
✍ | ராஜாமதிராஜ்.
சேலம் பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி சங்கீதா இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா நேற்று முன்தினம் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து.
தகலறிந்த வந்த கன்னங்குறிச்சி போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இறப்பதற்கு முன்பாக என்னை யாருக்கும் பிடிக்கவில்லை இதனால் எதற்கு வாழ வேண்டும் என்று இந்த முடிவை எடுத்து விட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்று தனது சகோதரிக்கு ஆடியோ பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளார். சங்கீதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறும்போது, சங்கீதாவை பணம் நகை கேட்டு அடிக்கடி கணவன் வீட்டார் துன்புறுத்தி வந்ததாகவும்,கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சங்கீதாவிடம் குடும்பச் சொத்தை பிரித்து வாங்கி வருமாறு வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.மேலும் பணம்,நகை கேட்டு துன்புறுத்தியதால் மனமுடைந்த சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே சீனிவாசன் குடும்பத்தார் மீது குற்ற வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
No comments