Header Ads

திருவாரூரில் 1 ரூபாய்க்கு இட்லி தோசை விற்கும் மூதாட்டி.....

✍️ | ராஜாமதிராஜ்.

திருவாரூர் அருகே நாராயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா (80) இவரது கணவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர் இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் தனியாக வசித்து வரும் கமலா தனது முதுமையை பொருட்படுத்தாமல் தானே உழைத்து வாழ வேண்டும் என்ற லட்சியத்துடன் நாராயணமங்கலம் பாண்டவை ஆறு கரையோரத்தில் கீற்றுக் கொட்டகையில் இட்லி கடை நடத்தி வருகிறார். எப்போதும் மக்கள் கூட்டம் இந்த கடையில் நிரம்பி வழிகிறது இதற்கு காரணம் இவர் கடையில் இட்லி மற்றும் தோசைக்கு ஒரு ரூபாய் மட்டுமே என்பது தான்.

இதற்கு ருசியாக இரண்டு வகை சட்னி மற்றும் சாம்பாருடன் இட்லி பொடியும் அளித்து வருகிறார்.கடந்த 50 ஆண்டுகளாக இவர் இந்த சேவையை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஒரு ரூபாய்க்கு எப்படி உணவு அளிக்க முடிகிறது என கமலா பாட்டியிடம் கேட்ட போது எனது மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் நடந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக எனது தாய் வழியில் இந்த இட்லிக் கடையை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். 

அந்த காலத்தில் எனது தாயார் ஐம்பது பைசாவிற்கு இட்லி தோசை விற்று வந்தார். அவருக்கு பின்னர் 1 ரூபாய்க்கு இட்லி தோசை வழங்க தொடங்கி கடந்த 50 ஆண்டுகளாக கடை நடத்தி வருவதாக மூதாட்டி தெரிவித்தார். தனக்கு அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றும் ஏழை எளிய மக்கள் பசியாற வேண்டும் என்பதுதான் எனது ஆசை. 

குறைந்த விலையில் உணவு அளித்து அனைவரின் பசியையும் போக்குவதில் மன திருப்தி அடைவதாகவும் தெரிவித்த கமலா பாட்டி காலை 6 மணி தொடங்கி 10 மணி வரை மட்டுமே கடை நடத்துவதாகவும் இந்த விற்பனையில் நாளொன்றுக்கு  200 ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும் இந்த தொகை தனக்கு போதுமானது என்றும் தெரிவித்த அவர் மனதிற்கு நிறைவான தொழிலாக இருப்பதால் இந்த வயதில் மகிழ்ச்சியுடன் வாழ முடிவதாகவும் கமலா பாட்டி தெரிவித்தார். 

இதுகுறித்து விவசாய தொழில் அவர்களிடம் கேட்டபோது காலை உணவிற்காக ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டால் காலை உணவுக்கு குறைந்தது 40 ரூபாய் வரை செலவாகும் கூலி வேலை செய்யும் தாங்கள் குறைந்த விலையில் பசியாற கமலா பாட்டியின் இந்த கடை துணையாக இருப்பதாக தெரிவித்தனர். 

உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வருபவர்களும் கடை வாசலில் காத்திருந்து சாப்பிட்டு  சென்றதாகவும் தெரிவித்தார் . வயதான காலத்தில் மற்றவர்களுக்கு பாரமாக இருக்காமல் உழைத்து சொந்தக் காலில் நிற்பது என்பது கடினமானது அதிலும் கமலா பட்டி குறைந்த விலையில் உணவளிக்கும் மக்களின் பசியைப் போக்குவது பாராட்டுக்குரியது.

No comments

Powered by Blogger.