Header Ads

மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை....


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஆசனூரில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்தார்.ஆசனூர் அருகே அட்டப்பாடியில் யானை தாக்கி ஆலம்மாள் என்பவர் உயிரிழந்தார். நள்ளிரவில்  தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை ஆலம்மாளை மிதித்து கொன்றது.

விழுப்புரம்: குடும்பத் தகராறில் புஷ்பா என்ற பெண் 4 வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.கிணற்றில் சடலமாக கிடந்த இருவரையும் மீட்டு அனந்தபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செட்டி வீதி கே.சி. தோட்டம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு, நேற்று இரவு பெய்த மழையினால் திடீரென்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் சுவேதா, கோபால் ஆகியோர் உயிரிழந்தனர்.கட்டிடம் இடிந்த இடத்தில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை: உணவகத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ. 44 லட்சம் மோசடி செய்ததாக புகார் கூறப்படுகிறது. ஆரப்பாளையத்தில் ரமணா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார் செந்தில் குமார். உணவகத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி துரைபாண்டி என்பவரிடம் ரூ. 44 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.ஓட்டலில் பங்குதாரராக சேர்க்காமலும், பணத்தை திருப்பி தராமலும் செந்தில் குமார் ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை: பெரும் எண்ணிக்கையில் கார்களும் இருச்சக்கரவாகனங்களும் குவிந்ததால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வார விடுமுறைக்குச் சென்ற அண்டை மாவட்ட மக்களும் சென்னை திரும்பியதால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. சென்னை பல்லாவரம் மற்றும் வண்டலூரில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் திறக்கப்படாததால் கூடுதல் நெரிசல் ஏற்பட்டது

சென்னை: பெரும் எண்ணிக்கையில் கார்களும் இருச்சக்கரவாகனங்களும் குவிந்ததால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வார விடுமுறைக்குச் சென்ற அண்டை மாவட்ட மக்களும் சென்னை திரும்பியதால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. சென்னை பல்லாவரம் மற்றும் வண்டலூரில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் திறக்கப்படாததால் கூடுதல் நெரிசல் ஏற்பட்டது

சென்னை சாலிகிராமம், வியாசர்பாடி  கொரோனா சித்த மருத்துவ மையங்களில்  சிகிச்சை பெற்று வரும்  கொரோனா நோயாளிகள் பலர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

நாமக்கல்: குண்டூர்நாட்டைச் சேர்ந்த ராஜாமணி கொல்லப்பட்ட வழக்கில் அசோகன், மதியழகனுக்கு ஆயுள் தண்டனை. ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.1,000 அபராதம் விதித்தும் நாமக்கல் மகிளா நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கான‌ல் பெர்ன் ஹில் சாலையில் மின்சார‌ம் தாக்கி ஜெய‌க்குமார் என்ப‌வ‌ர் உயிரிழ‌ப்பு. காவல்துறையினர் விசாரணை.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைத்து கோவில்களில் சானிடைசர் கொடுத்து வருகின்றனர். சானிடைசர் தடவிய கையுடன் விளக்கு தீபம் தொட்டு கும்பிடுகின்றனர். இதனால் தீபற்ற வாய்ப்புள்ளதால் சானிடைசர்க்கு மாற்று ஏற்பாடு செய்திட திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை

No comments

Powered by Blogger.