Header Ads

செட்டிநாட்டு சுவையான சுருள் போளி ரெசிபி...


 ✍️ | மகிழ்மதி.

தேவையான பொருட்கள்:

மைதாமாவு - 1/4 கிலோ

முந்திரி பருப்பு ( பாதி பாதியாக ஒடித்துக் கொள்ளவும்) - 50 கிராம்

சர்க்கரை (மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்) - 200 கிராம்

தேங்காய் ( துருவியது) - 1 என்னம்

நெய் - 4 தேக்கரண்டி

ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

எண்ணைய் - பொரிக்க தேவையான அளவு


செய்முறை:

மைதாமாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக் பிசைந்து கொள்ளவும்.

அடுப்பை சிம்மில் வைத்து ,வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சர்க்கரையும்,தேங்காய் துருவலையும் சேர்த்து ஒன்றாக கிளறி விடவும்.

முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

வறுத்த முந்திரி, ஏலப்பொடியை சர்க்கரை கலவையுடன் சேர்க்கவும்.

மைதாமாவை வட்ட வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் சிம்மில் வைத்து வட்டங்களை போட்டு லேசாக பொரித்து எடுக்கவும்.

பொரித்த வட்டங்களின் நடுவே தேங்காய், சர்க்கரை கலவையை வைத்து மடித்து மூட செட்டிநாட்டு சுருள் போளி ரெடி.

No comments

Powered by Blogger.