Header Ads

கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

65 வயதான சுரேஷ் அங்காடி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். அம்மாநிலத்தின் பெலகாவி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராவார்.  கடந்த 11ஆம் தேதி தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அங்காடி, மருத்துவர்களின் உரிய ஆலோசனைகளைப் பெற்று தான் நலமுடன் உள்ளதாக பதிவிட்டிருந்தார்.  இந்நிலையில் நோய் தொற்று பாதிப்பு தீவிரமடைந்ததன் விளைவாக தற்போது அவர் உயிரிழந்துள்ளார். கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.