Header Ads

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை


 ✍️ | தங்கப்பாண்டிசுரேஷ்.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களான தையல், இசை, கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகியவற்றை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டவேலையில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டனர்.

வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் பணியாற்றும் இவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அவர்களை அரசு கடந்த பத்தாண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்ய வில்லை. 

இதற்கிடையில் அவர்கள் ஒரு முறை இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டமும் நடத்தினர். அவர்களின் கோரிக்கை நியாயம் என்பதால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.