Header Ads

குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டதாக வாழ்த்து கடிதம்! கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


✍ | -ராஜாமதிராஜ். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு மற்றும் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மன்னார்குடி நகர் பகுதியில் மோதிலால் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் வசிப்பவர்கள் அன்றாடம் தினக் கூலி வேலைக்கு சென்று தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மன்னார்குடி நகராட்சி அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரிகள் தங்களுக்கு அரசின் சார்பில் வீடு கட்டிக் கொடுப்பதாக கோரி அவர்களிடம் இருந்து ரேஷன் கார்டு ஆதார் எண் போன்றவற்றின் நகல்களைக் பெற்றுச் சென்றுள்ளனர். இந்நிலையில் பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தாங்கள் வீடு கட்டி முடிப்பதற்கு வாழ்த்து தெரிவித்தும் அவற்றை தூய்மையாக பராமரித்து வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்ற பல வாசகங்களுடன் அந்த கடிதம் வந்துள்ளது. இந்த தெருவில் வசிக்கும் சுமார் 30க்கும் மேற்பட்ட இருக்கு இந்த வாழ்த்துக் கடிதம் வந்துள்ளது.

கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் இப்பகுதி குடிசை வாழ் மக்களின் வீடுகள் முற்றிலும் சேதமடைந்து தற்போது அந்த குடிசை வீடுகளை ஓரளவு சரி செய்து அதில் வசித்து வரும் இப்பகுதி மக்களுக்கு தங்கள் வீடு கட்டி முடிப்பதற்கு வாழ்த்து என்றும் கட்டிய வீட்டை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் பராமரிக்க வேண்டுமென வாழ்த்துச் செய்தி மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே விவசாயிகளுக்கான மத்திய அரசின் நிவாரண தொகை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நடந்திருப்பது தமிழகம் முழுவதும் விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மன்னார்குடிக்கு நகர்ப்பகுதி கிராமப்புறங்களில் வீடு கட்டி கொடுக்காமலேயே வீடு கட்டி முடிக்கப்பட்ட தாகவும் தனிநபர் கழிப்பறைகள் கட்டி தருவதிலும் முறைகேடு நடந்திருப்பதாக வெளிவரும் தகவலால் ஏழை எளிய பாமர மக்கள் அன்றாடம் தினக் கூலி வேலைக்கு சென்று வரும் மக்கள் அரசின் சலுகைகளை முழுமையாக பெற முடியாமலும் முழுமையாய் ஏமாற்றப்பட்டது நினைத்து மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.