Header Ads

வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை... அமைச்சர் செங்கோட்டையன்!!!

 

✍️ | ராஜாமதிராஜ்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் மற்றும் அரக்கன் கோட்டை பகுதியில் அதிமுக வின்  கட்சி அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார் பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் குழந்தைகளுக்கு டிசம்பர் மாதம் இறுதிக்குள் "ஷூ" வழங்கப்படும் என்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே   கொடுக்கப்பட்ட சீருடைகளுடன் மேலும் கூடுதலாக மூன்று சீருடைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

கோபி பகுதியில் படித்த 3000-ம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் முகாம் ஏற்படுத்தி வேலை வாய்ப்பு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  அதிமுக சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.