Header Ads

அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதை மறைமுகமாக மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது

கூடங்குளம் அணு உலைகள் போன்ற மென்நீர் உலைகளிலிருந்து வெளிவரும் "அணுக்கழிவுகளை" (பயன்படுத்தப்பட்ட ஏரிபொருள்) மறுசுழற்சி செய்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இப்போதைக்கு இல்லை என்பதை மறைமுகமாக மத்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது .- 

சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதில்:

✍️ | -தங்கப்பாண்டிசுரேஷ்.

கூடங்குளத்தில் உள்ள அணு உலைகள், மென்நீர் உலைகள் (PWR/LWR) வகையை சார்ந்தவை, இந்தியாவின் பிற இடங்களில் உள்ளவை கணநீர் உலைகளாகும். கூடங்குளம் தொடர்பாக ரஷியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி, இங்கே உற்பத்தியாகும் அனைத்து கழிவுகளும் ரஷியாவிற்கு அனுப்பிவைக்கப்படும் என்றுதான் முடிவு செய்யப்பட்டது. பிறகு இரண்டாவது ஒப்பந்தத்தில், கூடன்குளம் கழிவுகள் கூடங்குளத்திலேயே கையாளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலம் முடிவுற்றபிறகு அவை  மறுசுழற்சி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில், இது தொடர்பாக முக்கியமான கேள்விகளை எழுப்பி இருந்தேன்.
 
அதற்க்கு பதில் அளித்துள்ள, அணுசக்தி துறைக்கு பொறுப்பு வகிக்கும் இந்திய பிரதமர், கூடங்குளம் போன்ற அணுவுலைகளிலிருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாள்வதற்கான தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை, முதலில் சில ஆண்டுகள் அணுவுலைகளுக்குள் உள்ள தொட்டியில் பாதுகாக்கப்பட்டு, பிறகு மறு சுழற்சிமையத்திற்கு எடுத்துப்போகும் வரை அருகாமையில் உள்ள மையத்தில் (away from reactor) வைக்கப்படும் என்று தெரிவித்திருப்பது மூலம், நீண்டகாலத்திற்கு அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே வைக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது.
 
மேலும், இந்தியாவிற்கான "ஆழ்நில அணுக்கழிவு மையம்" (DGR) இபோதைக்கு தேவை இல்லை என்று பதில் அளித்திருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதி மன்றம் 2013ஆம் ஆண்டுகளில் வழங்கிய தீர்ப்பில், அடுத்த  ஐந்தாண்டுகளுக்குள் இந்தியாவின் டிஜிஆர் அமைக்கப்படவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராகவும் உள்ளது இந்த பதில். 2014ஆம் ஆண்டும் வழங்கிய தீர்ப்பிலும் டிஜிஆர் அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்ற உத்தரவிற்கு எதிராகவுள்ளது பிரதமரின் இந்த பதில்.
 
கூடங்குளம் அணுஉலைகள் தொடர்பாக போராடும் மக்கள் எழுப்பிவந்த கேள்விகளில் எவ்வளவு உண்மை இருந்தது என்பதை அரசு கொடுத்துள்ள பதிலில் இருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.

No comments

Powered by Blogger.