Header Ads

தினம் ஒரு குறள் அறிவோம்...


✍️ | மகிழ்மதி.

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

பதவுரை: கற்றதனால்-கல்வி பெற்றதனால்; ஆய-ஆகிய; பயன்-நன்மை; என்கொல்-என்னவோ; வால்அறிவன்-தூய்மையாகிய அறிவுடையவன், முற்றறிவு உடையன்; நல்-நல்ல; தாள்-அடி; தொழாஅர்-வழிபடமாட்டார், வணங்கார்; எனின்-என்றால்.
மு.வ உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?
கலைஞர் உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை

No comments

Powered by Blogger.