Header Ads

கூட்டணி கட்சியினரை ஒருமையில் அழைத்ததாக சர்ச்சை - வருத்தம் தெரிவித்து திமுக பொதுச் செயலாளர் துரை முருகன்


* நமக்குள் போட்டியைத் தவிர்த்து, அ.தி.மு.க.வின் வெற்றி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு ஒற்றுமையாய் தேர்தல் பணியாற்றுங்கள்.

எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மை விட இயக்கம் பெரிது. இரவு, பகல் பாராமல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்ற வேண்டும்.
ஜெ ஜெயலலிதா
கழக பொதுச் செயலாளர்.
(ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் பேஸ்புக் பதிவு)

* இன்று காலை சரியாக 9-30 மணிக்கு ஐ.ஏ.எஸ் , ஐபிஎஸ் உள்ளிட்ட ஆட்சிப்பணிகளுக்கான சிவில் தேர்வின் முதல்நிலைத்தேர்வு ( Prelims Exam) நடக்கிறது. காலை 9-30 - 11-30 மதியம் 2-30-4-30 மணிவரை 2 பாடப்பிரிவாக நடக்கிறது. இந்தியா முழுவதும் 10 லட்சம் பேர் வரை பதிவு செய்து 7 லட்சம் பேர்வரை எழுதுகின்றனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் தேர்வு நடக்கிறது.

* ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை.

ஓபிஎஸ் - இபிஎஸ் பிரச்சனை தீரவில்லை என்றால் அ.தி.மு.க.  ஆட்சிக்கு வர முடியாது - இல.கணேசன் பாஜக.
ஓபிஎஸ் உடன் அரசியல் தொடர்பாக ஆலோசிக்கவில்லை.உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை திறப்பு தொடர்பாக அவருடன் ஆலோசித்தேன் - அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.

* கூட்டணி கட்சியினரை ஒருமையில் அழைத்ததாக சர்ச்சை - வருத்தம் தெரிவித்து திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் அறிக்கை:

கூட்டணி தொடர்பாக யாரையும் ஒருமையில் பேசவில்லை. மாஸ்க் அணிந்து பேசியதால் சில வார்த்தைகள் தவறுதலாக வந்திருக்கலாம். எல்லோரிடத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; இனி இப்படி நிகழாவண்ணம் நடந்து கொள்வேன்.

திமுக தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமனம்.

திமுக மீனவர் அணி செயலாளராக பத்மநாபன், தலைமைக் கழக செய்தி தொடர்பு செயலாளராக பிடி.அரசகுமார் நியமனம்.

திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு துணைச் செயலாளராக அடையாறு ஷபீல், மீனவர் அணி துணைச் செயலாளராக சி.புளோரன்ஸ் நியமனம்.

எஸ்கே.வேதரத்தினம், என்.சிவக்குமார் ஆகியோர் திமுக விவசாய அணி துணைச் செயலாளராகவும், எ.வ.வே.கம்பன் திமுக மருத்துவ அணி துணைத்தலைவராக நியமனம்.

* நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல தற்கொலை தான் - எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா.

* அந்தமான் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை மையம்.  - வானிலை மையம்.

No comments

Powered by Blogger.