Header Ads

எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கடந்த 9-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை அரசு விடுதலை செய்யப் பட்ட மீனவர்களும் கோடியக்கரை வந்து சேர்ந்தனர்

✍ | -ராஜாமதிராஜ்.

எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கடந்த 9-ம் தேதி  இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை அரசு  விடுதலை செய்யப் பட்ட  மீனவர்களும்  கோடியக்கரை வந்து சேர்ந்தனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரையிலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்த பாண்டியன் என்பவருடைய படகில் கடந்த 7-ம் தேதி  அதே பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம், ராஜ், ரஞ்சித், முருகன் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டு 9-ம் தேதி கரை திரும்ப வேண்டிய நிலையில் பலத்த காற்றின் காரணமாக படகின் நங்கூரத்தின் கயிறு அறுந்ததால் மேற்கொண்டு படகை செலுத்த முடியவில்லை அப்போதுதிசைமாறி இலங்கை நெடுந்தீவு பகுதியை படகு அடைந்தது படகுடன் தமிழக மீனவர்கள் நான்கு பேரையும் எல்லை தாண்டி வந்ததாக காங்கேசன்துறை கடற்படையினர்  கைது செய்தனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களையும் இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில்   விடுதலை செய்யப் பட்ட நான்கு மீனவர்களும் இன்று 12-ம் தேதி அதிகாலை கோடியக்கரை வந்து சேர்ந்தனர்.

No comments

Powered by Blogger.